நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடும்ப வன்முறை உச்சம்: ஏழு மாத கர்ப்பிணியை உலக்கையால் அடித்துக் கொலை செய்த கணவன்

கோத்தா திங்கி:

கம்போங் மாக்காம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், கணவர் உலக்கை (lesung batu) கொண்டு தாக்கியச் சம்பவத்தில் ஏழு மாத கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 

இந்தத் துயரச் சம்பவம் குறித்து காலை 7 மணியளவில் தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாகக் கோத்தா திங்கி மாவட்ட காவல் துறை தலைவர், யூசுப் உத்மான் தெரிவித்தார்.

"35 வயதுடைய சந்தேகநபர் காலை 7.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகே கைது செய்யப்பட்டார். ஆரம்பக்கட்ட விசாரணையில், இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்தது என தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 34 வயதுடைய அம் மாதுவும் அவரது கணவரும் ரோஹிங்க்யா இனத்தைச் சேர்ந்தவர்கள்,” என்று அவர் கூறினார்.

மேலும், இரண்டாம் மாடியில் உள்ள வாடகை வீட்டின் ஓர் அறையில் அந்தப் பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கல் உலக்கை போன்ற பொருளால் தாக்கப்பட்டதால், அவரது தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அப்பெண்னின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காகக் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset