நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, தாய்லாந்து எல்லையில் அரிசி கடத்தல் திட்டம் அம்பலமானது

புக்கிட் காயு ஹித்தாம்: 

மலேசியா–தாய்லாந்து எல்லையில் உள்ள புக்கிட் காயு ஹித்தாம் ‘ICQS’ வளாகத்தில், சுமார் 100 டன் அரிசியை சட்டவிரோதமாக கடத்த முயன்ற முயற்சியை எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை தடுத்தது.

எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் மூத்த உதவி ஆணையர் முகமது நசாருதீன் எம் நசீர் கூறுகையில், தங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 4 மணியளவில் இரண்டு கொள்கலன் லாரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வில், எந்த அறிவிப்பும் இன்றி அண்டை நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிசி கண்டெய்னர்களின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு லாரியிலும் சுமார் 49,950 கிலோகிராம் அரிசி இருந்ததாகவும், மொத்தமாக கிட்டத்தட்ட 100 டன் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரண்டு கண்டெய்னர் லாரிகளும் அவற்றின் டிரெய்லர்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM1 மில்லியனைத் தாண்டும் என்றும், அதில் அரிசியின் மதிப்பு RM639,400 ஆகவும், வாகனங்களின் மதிப்பு RM420,000 ஆகவும் இருப்பதாக கூறப்பட்டது.                     

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset