நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து

கோலாலம்பூர்:

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய  பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அசாம் பாக்கியின் பங்குதாரர் தொடர்பான குற்றச்சாட்டுகள், கமிஷனின் தலைமை வணிகர்களுடன் கூட்டுச் சேர்ந்து கார்ப்பரேட் போட்டியாளர்களை அகற்றி கையகப்படுத்த ஏற்பாடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிட வேண்டும்.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி பிரதிநிதித்துவப்படுத்தும் அக்குழு, 1 எம்டிபி ஊழலின் போது டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக் செய்த தவறுகளை அன்வார் மீண்டும் செய்யக்கூடாது என்றும் எச்சரித்தது.

டத்தோஸ்ரீ அன்வார் முன்பு ஒருமுறை கூறியது போல், மக்களே நாட்டின் நீதிபதிகள்.

முதல் புளூம்பர்க் அறிக்கைக்கு அன்வாரின் எதிர்வினை அதை மூடிமறைக்க முயற்சிப்பதாக இருந்ததால், எங்களுக்கு வேறு வழியில்லை.

இதைத்தான் நாங்கள் செய்வோம் என்று அவர்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset