நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்

ஷா ஆலம்: 

ஊழலை ஒழிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில தரப்பினர் ஊழலில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், ஊழலை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தொடங்கியபோது, அதன் மீது பல்வேறு அழுத்தங்களும் விமர்சனங்களும் எழுகின்றன என அவர் கூறினார். 

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதில் எந்தத் தடையும் ஏற்படக் கூடாது. அவர்கள் ஊழலை எதிர்த்து தைரியமாகவும் கடுமையாகவும் செயல்பட வேண்டும். சிலர் ஊழல்வாதிகளை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஊழல் தடுப்பு ஆணையம் தனது கடமையை நேர்மையுடனும் உறுதியுடனும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset