நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி கார் பதிவு எண்ணை பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்த மியான்மர் நாட்டவர்கள் கைதாகினர்

தும்பாட்:

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேரைப் போலீஸார் இன்று கைது செய்தனர். ஐந்து பெண்கள், நான்கு ஆண்கள் அடங்கிய இவர்கள், அதிகாலை 4.30 மணியளவில் பாசிர் பெக்கான், வகாப் பாருவில் உள்ள சுல்தான் யாஹ்யா பெட்ரா பாலத்தின் சுரங்கப்பாதையில் பிடிபட்டனர்.

ரகசியமான முறையில் சென்ற புரோட்டான் ப்ரீவ் காரைத் தடுக்க முயன்றபோது, அது நிற்காமல் வேகமாகச் சென்று தடுப்புச்சுவரில் மோதியது.

பின்னர் ஓட்டுநர் தப்பியோடியதாக போலீஸ் தெரிவித்தது. வாகனத்தில் போலி பதிவு எண் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், சேசிஸ் எண்ணுக்கும் பதிவுகள் இல்லை.

பயணிகளிடம் எந்தச் செல்லுபடியாகும் பயண ஆவணங்களும் இல்லை என்றும், சட்டவிரோதமான மறைமுகப் பாதைகள் வழியாகவே அவர்கள் மலேசியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே பிடிப்பட்டவர்களிடமிருந்து 10 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு குடியேற்றச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது; அனைவரும் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset