நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவில் தலைவர் இன்னொருவரின் நிலத்தில் அத்துமீறி நுழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார்

சிப்பாங்:

கடந்த ஆண்டு தனிப்பட்ட நிலத்தில் அத்துமீறியதற்காக கோவில் தலைவர் ஒருவர் தன்னைக் குற்றமற்றவன் எனக் கூறி, இன்று மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

மேஜிஸ்ட்ரேட் கைரத்துல் அனிமா ஜீலானியின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது பாதுகாப்பு பணியாளராகப் பணிபுரியும் 49 வயதான எம். பரமகுரு தான் குற்றமற்றவன் என கூறியுள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர், ஜூன் 19, 2025 அன்று மாலை 4.45 மணிக்கு, டத்துக் சுஹைலி அஹ்மத் என்பவரின் சிலாங்கூர், டிரெட்ஜிங், டெங்கில் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447 கீழ் அதிகபட்சம் ஆறு மாத சிறை, அல்லது 3,000 ரிங்கிட் வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset