செய்திகள் மலேசியா
13 வயது மாணவரைப் பலமுறை பாலியல் தொல்லை செய்த ஆசிரியர் கைது
கோலாலம்பூர்:
13 வயது மாணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் பள்ளி ஆசிரியரைச் சம்பந்தப்படுத்தியப் புகார் ஒன்றைப் பெற்றுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் டேசா பண்டான் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 3, மதியம் 12.27 மணியளவில் இப்புகார் பெறப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட காவல்துறை தலைவர், ஏசிபி முஹம்மது லசீம் இஸ்மாயில் கூறினார்.
“பாதிக்கப்பட்ட மாணவரிடம் பாலியல் சேட்டை செய்த சந்தேக நபர் அந்தப் பள்ளியின் ஆசிரியராக உள்ளவர் என்றும், தான் அவரால் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இச்சம்பவம் 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (AKSTKK), பிரிவு 14(d) அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது.
முன்னதாகச் சந்தேக நபர் வேறு வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறை, ஆறு பிரம்படிகளைப் பெற்றுள்ளதாக முகமது லசீம் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 12:28 pm
மூன்று வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உயிரிழந்தது
February 6, 2026, 11:21 am
EPF-ன் i-Lindung பாதுகாப்பு திட்டம்; இந்திய சமுதாயத்திடையே முழு விழிப்புணர்வு தேவை: கோகுல நாதன்
February 6, 2026, 9:07 am
சீனப் பெருநாள் காலத்தில் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் நான்கு நாட்களுக்கு சாலைகளில் இயங்கத் தடை
February 5, 2026, 11:14 pm
டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கான புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது: டத்தோ அப்துல் ஹமித்
February 5, 2026, 11:13 pm
பல இனங்களைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை; சீனப் பள்ளியின் தரத்தைப் பாதிக்காது: ஃபட்லினா
February 5, 2026, 11:12 pm
மனிதவள அமைச்சின் கீழ் மித்ரா; இந்திய சமூகத்தின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்
February 5, 2026, 6:50 pm
மலேசியாவில் பதிவான முதல் BehindWoods நேர்காணலில் டத்தோ சிவக்குமார் இடம் பெறுகிறார்
February 5, 2026, 5:49 pm
