செய்திகள் மலேசியா
ஊடகவியலாளர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது குறித்து மலேசிய ஊடக மன்றம் விவாதிக்க வேண்டும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
ஊடகவியலாளர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது குறித்து மலேசிய ஊடக மன்றம் அனைத்து தரப்பினருடன் விவாதிக்க வேண்டும்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
ஊடகத் துறையினர் வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கையைச் செயல்படுத்துவது குறித்த கருத்துக்களைப் பெற வேண்டும்.
இதற்கு உள்ளூர் ஊடக நிறுவனங்கள், அமைப்புகளுடன் மலேசிய ஊடக மன்றம் கலந்துரையாட வேண்டும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஒவ்வொரு முடிவிலும், நாட்டில் உள்ள ஊடகத் துறை ஊழியர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே அமைச்சகத்தின் முக்கிய நோக்கம்.
அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்களைப் பெறுவது உட்பட, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தகவல் துறையையும் நான் கேட்டுக் கொள்வேன்.
அதிலிருந்து பெறப்படும் மேலதிக பரிசீலனைகளை அரசுப் பணித் தலைமை இயக்குநர் அனுப்பி, அமைச்சரவை, அமைச்சிற்கு தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
மலேசியாவில் அழியும் நெல் வயல்கள்
April 3, 2026, 2:57 pm
