நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கராபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் மோதல்

லண்டன்:

கராபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் அணிகள் மோதவுள்ளன.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை ஒமார் மர்மௌஷ், திஜ்ஜானி ரெய்ண்டர்ஸ் ஆகியோர் அடித்தனர்.

இதை தொடர்ந்து இரு ஆட்டங்களின் முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மென்செஸ்டர் சிட்டி அணியினர் கராபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.

மாபெரும் இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அர்செனல் அணியுடன் மோதவுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset