நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு

சிங்கப்பூர்:

Takata airbag கோளாற்றால் பாதிக்கப்பட்ட 3,200 வாகனங்களை சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

ஆணையம் வாகன வர்த்தகர்களுடன் இணைந்து செயல்பட்டு அந்த வாகனங்களைக் கண்டுபிடித்தது.

வாகன விபத்தின்போது அந்த airbag வெளியானதில் 57 வயதுத்  மைக்கல் ஓங் கொங் மெங் என்பவர் உயிரிழந்தார்.

airbagஇல் கோளாறு இருப்பதால் அவரது Honda காரை மீட்டுக்கொள்ள அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் காரை வாங்கிய நிறுவனம்மூடப்பட்டதால் அவருக்கு அந்தத் தகவல் சென்றுசேரவில்லை.

அடையாளம் காணப்பட்டுள்ள 3,200 வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும் என்று சிங்கப்பூர் ஆணையம் கூறியது. வாகனத்தைச் சீர் செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன நிறுவனங்கள் ஏற்கனவே சுமார் 212,000 வாகன உரிமையாளர்களுக்குத் தகவல் அளித்துவிட்டன.

கார்களை நம்பகமான நிறுவனங்களிடமிருந்து வாங்குமாறு சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset