செய்திகள் தொழில்நுட்பம்
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
சிங்கப்பூர்:
Takata airbag கோளாற்றால் பாதிக்கப்பட்ட 3,200 வாகனங்களை சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
ஆணையம் வாகன வர்த்தகர்களுடன் இணைந்து செயல்பட்டு அந்த வாகனங்களைக் கண்டுபிடித்தது.
வாகன விபத்தின்போது அந்த airbag வெளியானதில் 57 வயதுத் மைக்கல் ஓங் கொங் மெங் என்பவர் உயிரிழந்தார்.
airbagஇல் கோளாறு இருப்பதால் அவரது Honda காரை மீட்டுக்கொள்ள அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் காரை வாங்கிய நிறுவனம்மூடப்பட்டதால் அவருக்கு அந்தத் தகவல் சென்றுசேரவில்லை.
அடையாளம் காணப்பட்டுள்ள 3,200 வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும் என்று சிங்கப்பூர் ஆணையம் கூறியது. வாகனத்தைச் சீர் செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன நிறுவனங்கள் ஏற்கனவே சுமார் 212,000 வாகன உரிமையாளர்களுக்குத் தகவல் அளித்துவிட்டன.
கார்களை நம்பகமான நிறுவனங்களிடமிருந்து வாங்குமாறு சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 12:48 pm
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
March 13, 2026, 12:45 pm
பசுமை தொழில்நுட்பத்தில் ஜொகூர் முன்னிலை: ‘ZData’ மையத்திற்கு சான்றிதழ் வழங்கல்
March 11, 2026, 12:12 pm
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 23, 2026, 10:30 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகை இயக்கும் சக்தியாக மலேசியா: டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத்
February 22, 2026, 3:29 pm
சந்திரனுக்கு விண்வெளியை அனுப்பும் நாசாவின் திட்டம் தாமதமடையும்: ஜாரெட் ஐசக்மேன்
February 19, 2026, 10:06 am
தென் கொரியாவை குறிவைக்கும் வடகொரியா: ராக்கெட் ஆயுத மேம்பாட்டு திட்டம்
January 20, 2026, 12:06 pm
