செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் அதிகமானோரை வேலைக்குச் சேர்க்கும் Revolut நிறுவனம்
சிங்கப்பூர்:
Revolut நிதித் தொழில்நுட்ப நிறுவனம் சிங்கப்பூரில் அதன் ஊழியரணியை மும்மடங்காக்கத் திட்டமிடுகிறது. அடுத்த மூவாண்டில் அது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரைத் தளமாகக்கொண்டு ஆசியா முழுதும் வர்த்தகத்தை விரிவுபடுத்த முனைகிறது Revolut நிறுவனம்.
2024லிருந்து சென்ற ஆண்டு (2025) வரை Revolut சிங்கப்பூரில் அதன் ஊழியர்களை இரட்டிப்பாக்கியது.
அடுத்த மூவாண்டில் 300க்கும் அதிகமானோருடன் ஊழியரணியை மும்மடங்காக்க நிறுவனம் திட்டமிடுகிறது.
உற்பத்திப் புத்தாக்கம், வட்டார விரிவாக்கம் முதலியவற்றில் கவனம் செலுத்தக் கூடுதல் ஊழியர்கள் உதவுவர் என்று Revolut நிறுவனம் கூறியது.
Revolut நிறுவனம் நாணயப் பரிமாற்றம், வர்த்தகச் சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது.
சிங்கப்பூரில் அதன் விரிவாக்கத்திற்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் EDBI முதலீட்டு நிறுவனமும் ஆதரவு அளிக்கின்றன.
Revolut நிறுவனத்தின் மதிப்பு சுமார் 95 பில்லியன் வெள்ளி.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
January 27, 2026, 2:21 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக 3.96 நிலையில் வலுவாகத் தொடரும் ரிங்கிட்
January 26, 2026, 1:59 pm
மலேசிய விமானங்களில் இளநீர் விற்பனை: உலக சந்தையை நோக்கும் உள்ளூர் தொழில்முனைவோர்
January 21, 2026, 9:56 am
இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவால் ரூ.10 லட்சம் கோடி இழப்பு: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி
January 5, 2026, 11:20 am
வெனிசுவேலாவில் அரசியல் மாற்றம்: உலக எண்ணெய் விலை சரிவு
January 2, 2026, 3:46 pm
சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும் 4,600 புதிய BTO வீடுகள்
December 31, 2025, 12:43 pm
இன்று தலைநகரில் தங்கம் விலை குறைந்தது
December 25, 2025, 11:20 am
