நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் அதிகமானோரை வேலைக்குச் சேர்க்கும் Revolut நிறுவனம்

சிங்கப்பூர்:

Revolut நிதித் தொழில்நுட்ப நிறுவனம் சிங்கப்பூரில் அதன் ஊழியரணியை மும்மடங்காக்கத் திட்டமிடுகிறது. அடுத்த மூவாண்டில் அது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரைத் தளமாகக்கொண்டு ஆசியா முழுதும் வர்த்தகத்தை விரிவுபடுத்த முனைகிறது Revolut நிறுவனம்.

2024லிருந்து சென்ற ஆண்டு (2025) வரை Revolut சிங்கப்பூரில் அதன் ஊழியர்களை இரட்டிப்பாக்கியது.

அடுத்த மூவாண்டில் 300க்கும் அதிகமானோருடன் ஊழியரணியை மும்மடங்காக்க நிறுவனம் திட்டமிடுகிறது.

உற்பத்திப் புத்தாக்கம், வட்டார விரிவாக்கம் முதலியவற்றில் கவனம் செலுத்தக் கூடுதல் ஊழியர்கள் உதவுவர் என்று Revolut நிறுவனம் கூறியது.

Revolut நிறுவனம் நாணயப் பரிமாற்றம், வர்த்தகச் சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

சிங்கப்பூரில் அதன் விரிவாக்கத்திற்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் EDBI முதலீட்டு நிறுவனமும் ஆதரவு அளிக்கின்றன.

Revolut நிறுவனத்தின் மதிப்பு சுமார் 95 பில்லியன் வெள்ளி.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset