செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் அதிகமானோரை வேலைக்குச் சேர்க்கும் Revolut நிறுவனம்
சிங்கப்பூர்:
Revolut நிதித் தொழில்நுட்ப நிறுவனம் சிங்கப்பூரில் அதன் ஊழியரணியை மும்மடங்காக்கத் திட்டமிடுகிறது. அடுத்த மூவாண்டில் அது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரைத் தளமாகக்கொண்டு ஆசியா முழுதும் வர்த்தகத்தை விரிவுபடுத்த முனைகிறது Revolut நிறுவனம்.
2024லிருந்து சென்ற ஆண்டு (2025) வரை Revolut சிங்கப்பூரில் அதன் ஊழியர்களை இரட்டிப்பாக்கியது.
அடுத்த மூவாண்டில் 300க்கும் அதிகமானோருடன் ஊழியரணியை மும்மடங்காக்க நிறுவனம் திட்டமிடுகிறது.
உற்பத்திப் புத்தாக்கம், வட்டார விரிவாக்கம் முதலியவற்றில் கவனம் செலுத்தக் கூடுதல் ஊழியர்கள் உதவுவர் என்று Revolut நிறுவனம் கூறியது.
Revolut நிறுவனம் நாணயப் பரிமாற்றம், வர்த்தகச் சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது.
சிங்கப்பூரில் அதன் விரிவாக்கத்திற்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் EDBI முதலீட்டு நிறுவனமும் ஆதரவு அளிக்கின்றன.
Revolut நிறுவனத்தின் மதிப்பு சுமார் 95 பில்லியன் வெள்ளி.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
May 11, 2026, 5:05 pm
