செய்திகள் மலேசியா
மூவார் காவல்துறையினது குடியிருப்புகளை சீரமைக்க 1 மில்லிய ரிங்கிட் ஒதுக்கீடு: மாநில அரசு அறிவிப்பு
ஜொகூர் பாரு:
மூவார் மாவட்ட காவல் தலைமையகத்தின் கீழ் உள்ள காவல்துறையினது குடியிருப்புகளைப் சீரமைக்க ஜொகூர் மாநில அரசு 1 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
ஜொகூர் முதலமைச்சர் டத்தோ ஒன் ஹாபீஸ் காசி கூறுகையில், காவல்துறையினருக்கு பாதுகாப்பான, வசதியான குடியிருப்பு சூழலை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மூவார் மாவட்டத்துக்குச் சென்றபோது, நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த காவலர் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டதாகவும், பல வீடுகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையும், அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பது கவனிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களின் நலனைக் கவனிப்பது அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
இந்நிதி ஒதுக்கீடு மூலம் குடியிருப்புகள் மேம்படுத்தப்பட்டு, அங்கு பணியாற்றும் காவல்துறையினருக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
சரவாக்கில் பரபரப்பு: காட்டில் சிக்கிய 22 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு
March 12, 2026, 4:53 pm
15 வயது மாணவியிடம் அத்துமீறல்: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
March 12, 2026, 4:51 pm
4 மாத குழந்தை மரண வழக்கு: பயிற்சி இல்லாமல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்
March 12, 2026, 4:01 pm
