நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் குறித்து நாளைய அமைச்சரவை கூட்டத்தில் ஆராயல்படும்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களைத் தொடர்ந்து, பொருளாதார ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மலேசிய அரசாங்கம் நாளை நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை  செயல்படுத்தும் திட்டத்தை ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார குறிகாட்டிகளைக் கருத்தில் கொண்ட பிறகு, இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்திலிருந்து பல தனியார் நிறுவனங்கள் கலப்பின வேலை கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது.

ஆனால் பொதுத்துறையைப் பொறுத்தவரை, ஆழமான ஆய்வுகள் தேவை.

இந்த திட்டத்தின் பொருத்தத்தை நாங்கள் ஆராய்வோம். ஒருவேளை நாளை அதைப் பற்றி விவாதிப்போம்.

உலகப் பொருளாதார புள்ளிவிவரங்களைப் பார்ப்பதும், அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் எங்கள் முக்கிய கவனம்.

தகவல் தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset