செய்திகள் மலேசியா
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
கோலாலம்பூர்:
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறினார்.
பொங்கலும் தைத்திங்களும் இரட்டிப்புக் கொண்டாட்டம். இந்த புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, நலம், வளம், அன்பைக் கொண்டு வர மனமார்ந்த வாழ்த்துகள்.
பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியத் திருநாள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும்.
இயற்கைக்கும், விளைச்சலுக்கும் நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் கொண்டாட்டம் குடும்பத்தினர், நண்பர்கள், சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் விளங்குகிறது.
பொங்கல் என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது காலங்காலமாய் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று.
வாழ்வின் சிறப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் இந்த விழா தமிழர்களின் அடையாளம், விவசாயிகளின் உழைப்பு.
இப்படிப் பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வாழ்வின் சிறப்பைக் கொண்டாடும் அற்புதமான திருநாள்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பொங்கலைக் கொண்டாடுங்கள்.
உங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள்.
இந்தப் புத்தாண்டில் புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள்.
பொங்கல் பண்டிகையை ஒரு புதிய தொடக்கமாக எடுத்துக் கொண்டு உங்கள் வாழ்வைச் சிறப்பாக வாழுங்கள்.
புதிய ஆண்டு, புதிய வாய்ப்புகள், புதிய மகிழ்ச்சி என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 5:38 pm
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது
May 23, 2026, 5:36 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2026, 2:22 pm
சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று உதவுவோம்: பிரதமர்
May 23, 2026, 12:44 pm
