செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியில் மஇகா நீடிப்பது அல்லது வெளியேறுவது குறித்த முடிவு பிப்ரவரியில் எடுக்கப்படலாம்: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
தேசிய முன்னணியில் மஇகா நீடிப்பது அல்லது வெளியேறுவது குறித்த முடிவு பிப்ரவரி மாதத்தில் எடுக்கப்படலாம்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கோடிக்காட்டினார்.
தைப்பூச விழா கொண்டாட்டங்களுக்குப் பிறகு மஇகா இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தைப்பூசத்திற்குப் பிறகு நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம்.
ஒருவேளை பிப்ரவரி தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இந்த முடிவு எடுக்கப்படும்.
இம்மாதம் அம்னோ பொதுப் பேரவை நடைபெறவுள்ளது. எனவே முதலில் அதை முடித்துக் கொள்வோம்.
பேரா தாப்பா மஇகா தலைமையகத்தில் நாடாளுமன்றத்தில் பி40 வர்த்தகர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
மஇகா கூட்டணியிலிருந்து விலகுவதாக வதந்திகள் பரவிய போதிலும், தேசிய முன்னணி உடனான கட்சியின் உறவு இன்னும் இணக்கமாக உள்ளது.
16ஆவது பொதுத் தேர்தல் வரை மஇகா தேசிய முன்னணி உடன் தொடருமா என்பது குறித்த இறுதி முடிவை கட்சியின் உச்சமன்றம் எடுக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 6:10 pm
ஜாமீனுடன் விடுவிக்கப்பட்ட 'SOSMA' கைதிகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
