செய்திகள் மலேசியா
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களாக புவனேஸ்வரன் உட்பட 23 பேர் பதவியேற்றனர்
கோலகுபு பாரு:
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2026-2027ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்களாக 23 பேர் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கெஅடிலான் சார்பில் 10 பேரும் ஜசெகவைப் பிரதிநிதித்து 8 பேரும் அமானா கட்சியை சேர்ந்த 5 பேரும் இதில் அடங்குவர்.
ப. புவனேஸ்வரன், வீ. முருகன், ச. ஸ்ரீகாந்த் ஆகியோர் கெஅடிலானை சேர்ந்த இந்திய கவுன்சிலர் உறுப்பினர்களாவர்.
ஜசெகவைப் பிரதிநிதித்து திலகேஸ்வரி, சின்னையா, ராஜேஷ் ராவ் என மூவர் உட்பட அமானா கட்சியை சேர்ந்த துரை அன்பழகன் என்பவரும் பதவி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
கெஅடிலானை சேர்ந்த நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு ப. புவனேஸ்வரன் தலைமையேற்கிறார்.
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஜூலைஹா பிந்தி ஜமாலுடின் முன்னிலையில் இன்று காலை பதவி ஏற்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் கட்சியின் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவி ஏற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 6, 2026, 10:22 pm
பெர்சத்துவில் இருந்து சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்
January 6, 2026, 10:17 pm
துன் டாக்டர் மகாதீரின் இடுப்பு எலும்பு முறிந்தது: சிகிச்சை பல வாரங்கள் நீடிக்கும்
January 6, 2026, 10:14 pm
மடானி அரசாங்கத்தை தாங்கி பிடிக்கும் அம்னோவின் முடிவு முதிர்ந்த அரசியலாகும்: சைபுடின்
January 6, 2026, 5:52 pm
வெள்ளி ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
January 6, 2026, 1:48 pm
புக்கிட் அமான் JSPT இயக்குநர் உட்பட காவல் துறை மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம்
January 6, 2026, 1:37 pm
இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது: ஜாஹித்
January 6, 2026, 1:02 pm
நான்கு மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 13 நிவாரண முகாம்களில் 1,419 பேர் தங்கியுள்ளனர்
January 6, 2026, 12:56 pm
