செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கத்தை தாங்கி பிடிக்கும் அம்னோவின் முடிவு முதிர்ந்த அரசியலாகும்: சைபுடின்
கோலாலம்பூர்:
மடானி அரசாங்கத்தை தாங்கிப் பிடிக்கும் அம்னோவின் முடிவு அக்கட்சியின் முதிர்ந்த அரசியலைக் குறிக்கிறது.
உள்துறை அமைச்சரும் நம்பிக்கை கூட்டணியின் தலைமைச் செயலாளருமான டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இவ்வாறு கூறினார்.
மடானி அரசாங்கத்தில் நீடிக்க அம்னோ எடுத்த முடிவு பாராட்டுக்குரியது.
மேலும் அக் கட்சியின் உயர்ந்த அரசியல் முதிர்ச்சியை இது காட்டுகிறது.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பு அரசியல் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பராமரிக்க உதவியது.
கூட்டணி அரசாங்கத்தின் சூழலிலும், நம்பிக்கை கூட்டணி முயற்சியின் தலைவராகவும், அம்னோ தலைமையின் முடிவு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்த மூன்று ஆண்டுகளில் அம்னோ அரசாங்கத்தில் மிகப்பெரிய மலாய் அரசியல் கட்சியாக இருந்து வருகிறது.
அவர்கள் அரசாங்கத்தில் மிகப்பெரிய மலாய் கட்சி என்பது தெளிவான ஒன்று.
இன்று, இப்போது நிச்சயமாக அவர்களின் தேசிய முன்னணி எண்ணிக்கையான 30 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இப்போது எட்டு முழு அமைச்சர்களைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
