நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தை தாங்கி பிடிக்கும் அம்னோவின் முடிவு முதிர்ந்த அரசியலாகும்: சைபுடின்

கோலாலம்பூர்:

மடானி அரசாங்கத்தை தாங்கிப் பிடிக்கும்  அம்னோவின் முடிவு அக்கட்சியின் முதிர்ந்த அரசியலைக் குறிக்கிறது.

உள்துறை அமைச்சரும் நம்பிக்கை கூட்டணியின் தலைமைச் செயலாளருமான டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இவ்வாறு கூறினார்.

மடானி அரசாங்கத்தில் நீடிக்க அம்னோ எடுத்த முடிவு பாராட்டுக்குரியது.

மேலும் அக் கட்சியின் உயர்ந்த அரசியல் முதிர்ச்சியை இது காட்டுகிறது.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பு அரசியல் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பராமரிக்க உதவியது.

கூட்டணி அரசாங்கத்தின் சூழலிலும், நம்பிக்கை கூட்டணி முயற்சியின் தலைவராகவும், அம்னோ தலைமையின் முடிவு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இந்த மூன்று ஆண்டுகளில் அம்னோ அரசாங்கத்தில் மிகப்பெரிய மலாய் அரசியல் கட்சியாக இருந்து வருகிறது.

அவர்கள் அரசாங்கத்தில் மிகப்பெரிய மலாய் கட்சி என்பது தெளிவான ஒன்று.

இன்று, இப்போது நிச்சயமாக அவர்களின் தேசிய முன்னணி எண்ணிக்கையான 30 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இப்போது எட்டு முழு அமைச்சர்களைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset