செய்திகள் மலேசியா
நான்கு மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 13 நிவாரண முகாம்களில் 1,419 பேர் தங்கியுள்ளனர்
கோலாலம்பூர்:
நாட்டின் நான்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால், இன்று காலை 11 மணி நிலவரப்படி 1,419 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று சமூக நலத் துறை (JKM) அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 522 குடும்பங்கள் சபா, சரவாக், ஜொகூர், பேராக் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச பாதிப்பு சபா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அங்கு மொத்தம் 1,164 பேர் 9 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் பியூஃபோர்ட் (587), கோத்தா பெலுட் (282), கோத்தா கினபாலு (189), டெனோம் (106) ஆகிய பகுதிகள் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து, சரவாக் மாநிலம் மிரி பகுதியில் 192 பேர், ஜொகூர் மாநிலம் செகமாட் பகுதியில் 27 பேர், பேராக் மாநிலம் கிந்தா பகுதியில் 22 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மொத்த பாதிக்கப்பட்டவர்களில் 872 பேர் பெரியவர்கள். 553 பேர் குழந்தைகள் ஆவர். அதில் 39 பேர் பச்சிளம் குழந்தைகளாவர்.
இதற்கிடையில், இன்பொ பன்சிர் இணையதளத்தின் தகவலின்படி, இன்று காலை 6.45 மணி நிலவரப்படி சரவாக் மாநிலத்தில் குறைந்தது மூன்று நதிகள் அபாய அளவை மீறியுள்ளன.
அதே மாநிலத்தில் பல நதிகள் எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளன. இதில் பின்துலு பகுதியில் உள்ள குவாலா பின்யோ, சுங்கை சிமிலாஜாவ், சுங்கை சிபியு, மிரி பகுதியில் நங்கா இன்சுங்கை, லிம்பாங், பெனாவா, லாங் தெரு பகுதிகள் அடங்கும்.
- கிருத்திகா
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
