நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனிநபர் பெயரில் விண்ணப்பம்; பத்துமலை மின் படிக்கட்டு திட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்?: பாப்பா ராயுடு விளக்கம் 

பத்துமலை:

பத்துமலை மின் படிக்கட்டு திட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன் என்ற காரணம் ஆலய நிர்வாகத்திற்கு தெரியும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இதனை கூறினார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பத்துமலை மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டு அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்ல என்ற விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமே இத்திட்டத்திற்கான அனுமதி விண்ணப்பம் தனிநபரின் பெயரில் உள்ளதாகும்.

இதனால் இத்திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

அது ஒரு அமைப்பு அல்லது இயக்கத்தின் பெயரில் அனுமதி கேட்டிருந்தால் உடனடியாக கிடைத்திருக்கும்.

இவ்விவகாரம் ஆலய நிர்வாகத்திற்கும் தெரியும் என்று பாப்பா ராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset