செய்திகள் மலேசியா
தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனைக்கு தடை: பாப்பாராயுடு
செலயாங்:
தைப்பூச விழாவின் போது மதுபானம் விற்பனைக்கு சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டும் தடை விதிக்கிறது. சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.
உலகமெங்கும் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மலேசியாவை பொறுத்தவரையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பத்துமலையில் தைப்பூச விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும்.
கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிகழ்வுகளும் பத்துமலையில் நடைபெறவுள்ளது.
இந்த தைப்பூச விழா பக்தர்கள் சமய நெறியுடன் கொண்டாடப்பட வேண்டும். குறிப்பாக தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனைக்கு மாநில அரசு தடை விதிக்கிறது.
பத்துமலையை தவிர்த்து மாநிலத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும் அனைத்து இடங்களில் இந்த தடை அமலில் இருக்கும்.
ஆக மக்கள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று பாப்பாராயுடு கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 6, 2026, 10:22 pm
பெர்சத்துவில் இருந்து சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்
January 6, 2026, 10:17 pm
துன் டாக்டர் மகாதீரின் இடுப்பு எலும்பு முறிந்தது: சிகிச்சை பல வாரங்கள் நீடிக்கும்
January 6, 2026, 10:14 pm
மடானி அரசாங்கத்தை தாங்கி பிடிக்கும் அம்னோவின் முடிவு முதிர்ந்த அரசியலாகும்: சைபுடின்
January 6, 2026, 5:52 pm
வெள்ளி ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
January 6, 2026, 1:48 pm
புக்கிட் அமான் JSPT இயக்குநர் உட்பட காவல் துறை மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம்
January 6, 2026, 1:37 pm
இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது: ஜாஹித்
January 6, 2026, 1:02 pm
நான்கு மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 13 நிவாரண முகாம்களில் 1,419 பேர் தங்கியுள்ளனர்
January 6, 2026, 12:56 pm
