செய்திகள் உலகம்
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
யாங்கூன்:
மியன்மாரின் ராணுவ அரசாங்கம் நாட்டின் தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் சுமார் 6,000 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
வருடாந்திரப் பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்ட பிறகு அதன் ராணுவ அரசாங்கம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டோரில் ஆர்ப்பாட்டக்காரர்களும் இருந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
52 வெளிநாட்டவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறும் வேளையில் கைதிகளின் விடுதலை குறித்த அறிவிப்பு வெளியாளது.
வாக்களிப்பின் அடுத்த இரண்டு கட்டங்கள் இந்த மாதம் நடைபெறவிருக்கின்றன.
முதற்கட்ட வாக்களிப்பில் ராணுவத்தின் ஆதரவு கொண்ட ஒருங்கிணைந்த ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தேர்தல் ஆணையம் சொன்னது.
அது கீழவையின் 96 இடங்களில் 87 இடங்களை வென்றுள்ளது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 4:15 pm
சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
January 3, 2026, 11:11 pm
வெனிசுவெலா அதிபரையும் மனைவியையும் பிடித்து நாடு கடத்திவிட்டோம்: டிரம்ப் அறிவிப்பு
January 3, 2026, 7:30 pm
இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி
January 3, 2026, 6:50 pm
தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்
January 2, 2026, 10:38 pm
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
January 2, 2026, 5:59 pm
இலங்கை சாலைகள் பாதுகாப்பற்றவையா?: 2025-இல் அதிகரித்த உயிரிழப்புகள்
January 2, 2026, 5:29 pm
சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
January 2, 2026, 4:02 pm
