நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை

யாங்கூன்: 

மியன்மாரின் ராணுவ அரசாங்கம் நாட்டின் தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் சுமார் 6,000 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.

வருடாந்திரப் பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்ட பிறகு அதன் ராணுவ அரசாங்கம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டோரில் ஆர்ப்பாட்டக்காரர்களும் இருந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

52 வெளிநாட்டவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறும் வேளையில் கைதிகளின் விடுதலை குறித்த அறிவிப்பு வெளியாளது.

வாக்களிப்பின் அடுத்த இரண்டு கட்டங்கள் இந்த மாதம் நடைபெறவிருக்கின்றன.

முதற்கட்ட வாக்களிப்பில் ராணுவத்தின் ஆதரவு கொண்ட ஒருங்கிணைந்த ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தேர்தல் ஆணையம் சொன்னது.

அது கீழவையின் 96 இடங்களில் 87 இடங்களை வென்றுள்ளது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset