நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி

காபூல்: 

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்தியது. ஆயுதக் குழுக்களின் முகாம்கள், மறைவிடங்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை கூறுகையில், இந்த தாக்குதலில் நங்கர்ஹார், பக்திகா பகுதிகளில் உள்ள சமயப் பள்ளிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டதாகவும், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்து காயமடைந்ததாகவும் தெரிவித்தது.

நங்கர்ஹாரில் குறைந்தது பதினேழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன; பக்திகாவில் இழப்பு எண்ணிக்கை உறுதியாகவில்லை.

இதற்கிடையில், பாகிஸ்தான் தகவல் துறை, எல்லைப் பகுதிகளில் செயல்படும் ஆயுத அமைப்புகளின் ஏழு முகாம்கள் மீது துல்லியத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாக கூறியது. அந்த அமைப்புகள் பாகிஸ்தானில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்கு பொறுப்பானவை எனவும், அவை ஆப்கானிஸ்தானிலிருந்து திட்டமிடப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியது.

இந்த குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் மறுத்ததுடன், வான்வழி தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறியது என கண்டனம் தெரிவித்தது. மேலும், பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset