நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: 

அமெரிக்கா, கிரீன்லாந்துக்கு ஒரு மருத்துவக் கப்பலை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அங்கு சிகிச்சை பெற முடியாமல் இருக்கும் நோயாளிகளுக்கு உதவவே இந்த நடவடிக்கை என அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். ஆனால், திட்டத்தின்  விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த அறிவிப்பு, கிரீன்லாந்தை இணைத்துக்கொள்ளும் எண்ணம் குறித்து டிரம்ப் முன்வைத்த கருத்துகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளதால், டென்மார்க்குடன் உள்ள உறவுகளில் பதற்றம் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கிரீன்லாந்து, டென்மார்க்கு ஆட்சியின் கீழ் இருந்தாலும், பரந்த சுயாட்சியை கொண்டுள்ளது.

அமெரிக்க கடற்படை இரண்டு பெரிய மருத்துவக் கப்பல்களை இயக்குகிறது; அவை இயற்கை பேரிடர்களுக்குப் பிறகு உதவிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், சுமார் ஐம்பத்தேழு ஆயிரம் மக்கள் வசிக்கும் கிரீன்லாந்தில் சமீப காலங்களில் பெரிய மருத்துவ அவசர நிலை எதுவும் பதிவாகவில்லை.

இந்த மருத்துவக் கப்பல் அனுப்பும் நடவடிக்கை டென்மார்க்கு அரசு அல்லது கிரீன்லாந்து நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டதா என்பது தெளிவில்லை. மேலும், ஐரோப்பிய நாடுகள் பல, கிரீன்லாந்தை இணைக்கும் எந்த முயற்சியையும் மறுத்து, டென்மார்க்குக்கும் கிரீன்லாந்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset