செய்திகள் உலகம்
இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீயில் 16 பேர் கருகி மாண்டனர்
மனாடோ:
இந்தோனேசியாவின் சுலாவேசித் (Sulawesi) தீவின் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீயில் 16 பேர் கருகி மாண்டனர்; மூவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
சுலாவேசியின் மனாடோ (Manado) நகரில் சம்பவம் நிகழ்ந்தது.
பல உடல்கள் அறைக்குள்ளேயே கண்டெடுக்கப்பட்டன. மூத்தோர் பலர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
12 பேரைப் பத்திரமாக வெளியேற்றி உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பியதாக அதிகாரிகள் கூறினர்.
முதியோர் இல்லத்தில் தீ சூழ்வதையும் உள்ளூர்வாசிகள் முதியோரைப் பத்திரமாக வெளியே கொண்டு செல்வதையும் உள்ளூர் ஊடகங்களில் காணமுடிந்தது.
17,000க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் தீச் சம்பவங்கள் வழக்கமானவை என்றாலும் இயலாத முதியோர்கள் தங்கி இருந்த இல்லம் தீப்பிடித்ததை அனைவரும் சோகத்துடன் பேசி வருகின்றனர்.
இந்த மாதம் இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் 7 மாடி கட்டடத்தில் தீ பரவியதில் 22 பேர் மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:31 pm
எல்லைச் சுவருக்காக மக்களின் வீடுகள் பறிப்பு: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
