செய்திகள் உலகம்
மெக்சிகோவில் மோசமான ரயில் விபத்து: 13 பேர் மரணம்
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் ஒக்ஸாகா (Oaxaca) மாநிலத்தில் ரயிலின் ஒரு பகுதி தடம்புரண்டதில் 13 பேர் மாண்டனர். விபத்தில் 98 பேர் காயமுற்றனர்.
அந்த ரயிலில் சுமார் 250 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு உதவ கடற்படை செயலாளரும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் செல்வர் என்று மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) கூறினார்.
அந்த ரயில் பாதையை மெக்சிகோவின் கடற்படை நிர்வகிக்கிறது.
விபத்தின் காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்படும் என்று நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் தெரிவித்தது.
மெக்சிகோ வளைகுடாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே அந்த ரயில் பயணம் செய்கிறது. அதில் சரக்குகளும் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 10:22 pm
தோக்கியோ மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய ஓநாய்
December 28, 2025, 4:18 pm
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
December 28, 2025, 10:38 am
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
