நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை

பெய்ஜிங்: 

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின்  ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் அது சாத்தியமானது.

‘மேக்​னெடிக் லெவிடேஷன்' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 டன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்​தினர். இதில் வெறும் 2 விநாடிகளில் அந்த ரயில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்​தது.

காந்த சக்தியின் உதவியுடன் ரயில் தடத்துக்குமேல் சற்று உயர்த்தப்பட்டது. அதனால் ரயில் தடத்துடன் உரசாமல் வேகமாகச் செல்லமுடிந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

400 மீட்​டர் (1,310 அடி) நீள​முள்ள காந்​தப்​புல ரயில் பாதை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாது​காப்​பாக நிறுத்​தப்​பட்​டது. இதன் மூலம் இது​வரை உரு​வாக்​கப்​பட்ட காந்​தப்​புல ரயில்​களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெரு​மையை இது பெற்​றது.

இந்த ரயில், தண்​ட​வாளங்​களைத் தொடா​மல், அதன் மேலே காந்த விசையில் செல்​லக்​கூடியது. இதன் முடுக்​கம் மிக​வும் சக்தி வாய்ந்​தது. ஒரு ராக்​கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்​தது. இந்த வேகத்​தில் நீண்ட தொலை​வில் உள்ள நகரங்​களை சில நிமிடங்​களில் இந்த ரயில்​கள் மூலம் நாம் இணைக்க முடி​யும்.

இந்த சாதனையை படைத்த ஆராய்ச்​சி​யாளர்​கள் குழு கடந்த 10 ஆண்​டு​களாக இந்​தத் திட்​டத்​தில் பணி​யாற்றி வரு​கிறது.

ஆதாரம்: South China Morning Post 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset