செய்திகள் உலகம்
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
சிங்கப்பூர்:
காவல்துறை நடத்திய ஆண்டிறுதிச் சோதணை நடவடிக்கைகளில் 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் சோதனையில் இணைந்தன.
மொத்தம் 4,500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் முக்கிய நோக்கம் சட்டவிரோத நடவடிக்கைகளை முடக்குவது.
நவம்பர் 22ஆம் தேதி தொடங்கிய சோதனை 4 வாரங்கள் நீடித்தது. இந்த சோதனை நடவடிக்கையின் போது 1,771 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது வெவ்வேறு குற்றங்கள் தொடரில் பலர் கைதுசெய்யப்பட்டனர்.
போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் 14 ஓட்டுநர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களில் 10 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சொல்லப்பட்டது.
மின்சிகரெட் வைத்திருந்ததாக 8 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து மின்சிகரெட், அது சம்பந்தப்பட்ட பாகங்கள் என மொத்தம் 37 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடற்பிடிப்பு நிலையங்கள், பொழுதுபோக்கு விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.
ஆதாரம்: 8 World
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 4:18 pm
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
