செய்திகள் உலகம்
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
சிங்கப்பூர்:
காவல்துறை நடத்திய ஆண்டிறுதிச் சோதணை நடவடிக்கைகளில் 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் சோதனையில் இணைந்தன.
மொத்தம் 4,500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் முக்கிய நோக்கம் சட்டவிரோத நடவடிக்கைகளை முடக்குவது.
நவம்பர் 22ஆம் தேதி தொடங்கிய சோதனை 4 வாரங்கள் நீடித்தது. இந்த சோதனை நடவடிக்கையின் போது 1,771 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது வெவ்வேறு குற்றங்கள் தொடரில் பலர் கைதுசெய்யப்பட்டனர்.
போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் 14 ஓட்டுநர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களில் 10 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சொல்லப்பட்டது.
மின்சிகரெட் வைத்திருந்ததாக 8 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து மின்சிகரெட், அது சம்பந்தப்பட்ட பாகங்கள் என மொத்தம் 37 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடற்பிடிப்பு நிலையங்கள், பொழுதுபோக்கு விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.
ஆதாரம்: 8 World
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 22, 2026, 10:24 am
