செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
சிங்கப்பூர்:
ஜூரோங் வெஸ்ட் (Jurong West) வட்டாரத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன.
ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1இல் விபத்து நடந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அது குறித்துக் காலை 10.52 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் அது தெரிவித்தது.
இரண்டு பேருந்துகளும் சேதமடைந்தன.
ஒரு பேருந்தின் ஓட்டுநர் இருக்கைப் பகுதியில் ஒருவர் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. நீரழுத்த இயந்திரத்தைக் கொண்டு அவரை மீட்டதாக அது தெரிவித்தது.
மற்ற பயணிகள் பேருந்துகளிலிருந்து இறங்கிச் சாலையோரம் அமர்ந்திருந்தனர்.
Tissue தாளைக் கொண்டு ரத்தம் கசிவதை நிறுத்த அவர்கள் முயன்றதாக 8world கூறியது.
மொத்தம் 44 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஆதாரம்: 8world
தொடர்புடைய செய்திகள்
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
