செய்திகள் உலகம்
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் முன்னாள் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஃபையிஸ் ஹமீது (Faiz Hameed) பாகிஸ்தானிய ராணுவத்தில் இரண்டாவது உச்சத் தலைவராகப் பணியாற்றியவர்.
அவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர். 2022ஆம் ஆண்டில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பிறகு இம்ரான் கான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். தற்போது ஊழல் புரிந்ததற்காகச் சிறையில் இருக்கிறார்.
முன்னைய உளவுப்பிரிவுத் தலைவர் ஹமீது மீது அரசியலில் ஈடுபட்டது, அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராணுவம் வேறு எந்தத் தகவலையும் அளிக்கவில்லை. குறிப்பாக, அவர் புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்களைப் பற்றி எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
ஹமீது 2024ஆம் ஆண்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். சொத்துச் சந்தை நிறுவனம் Top City நடத்திய கட்டுமான மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆதாரம் : AP
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
