நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெமாஸ், ஜொகூர் மின்சார ரயில் இரட்டைப் பாதையை துங்கு இஸ்மாயில் தொடக்கி வைத்தார்

ஜொகூர்பாரு:

ஜெமாஸ், ஜொகூர்  மின்சார ரயில் இரட்டைப் பாதையை ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் தொடக்கி வைத்தார்.

கோலாலம்பூர், ஜொகூர் பாரு இடையேயான தெற்குப் பாதைக்கான ரயில் போக்குவரத்து வலையமைப்பை நிறைவு செய்யும் ஒரு திட்டமான கெமாஸ்-ஜொகூர் பாரு மின்சார இரட்டைப் பாதை நிறைவு பெற்றது.

இந்த மின்சார ரயில் சேவை 3 (ETS3) கேஎல் சென்ட்ரல்- ஜொகூர் சென்ட்ரல்-கேஎல் சென்ட்ரல் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது.

முன்பு குளுவாங்கில் முடிவடைந்த பாதையின் நீட்டிப்பை இது நிறைவு செய்கிறது.

192 கிலோமீட்டர் நீளமுள்ள கெமாஸ்-ஜொகூர் பாரு மின்சார இரட்டைப் பாதைத் திட்டம், SIPP-YTL JV ஆல் முக்கிய உள்ளூர் துணை ஒப்பந்ததாரராக உருவாக்கப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், ஜொகூர் மந்திரி புசார் ஓன் ஹபிஸ் காசி,  SIPP-YTL JV நிர்வாக இயக்குனர் யோ சியோக் ஹாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதில் தேசிய வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியாக இந்தத் திட்டம் விவரிக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் தனது உரையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset