செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் குறுந்தகவல் மோசடி: தடுக்க Apple, Google நிறுவனங்களுக்கு உத்தரவு
சிங்கப்பூர்:
அரசாங்க அமைப்புகளைப் பிரதிநிதித்தி அனுப்பப்படும் குறுந்தகவல்களைத் (SMS) தடுக்க சிங்கப்பூர்க் காவல்துறை Apple, Google நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (நவம்பர் 30) இரு நிறுவனங்களும் தடுப்புகளை அவற்றின் குறுந்தகவல் சேவைகளில் பொருத்தவேண்டும்.
அரசாங்க அமைப்புகளிலிருந்து நேரடியாக வரும் குறுந்தகவல்கள் "gov.sg" என்ற பெயரைக் கொண்டுள்ளன. போலித் தகவல்களிலிருந்து உண்மையான தகவல்களைக் கண்டறிய அது உதவுகிறது.
ஆனால் அது Appleஇன் iMessage சேவையிலும் Googleஇன் Google Messages சேவையிலும் இன்னும் நடப்புக்கு வரவில்லை.
இதுவரை SingPost அமைப்பைப் பிரதிநிதித்தி 120க்கும் அதிகமான மோசடித் தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.
அத்தகையச் சம்பவங்களைத் தவிர்க்க, பாதுகாப்பு அம்சங்களைக் குறுந்தகவல் சேவைகளில் பொருத்தும்படி காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரவுக்கு இரு நிறுவனங்களும் இணங்கியிருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
