செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் குறுந்தகவல் மோசடி: தடுக்க Apple, Google நிறுவனங்களுக்கு உத்தரவு
சிங்கப்பூர்:
அரசாங்க அமைப்புகளைப் பிரதிநிதித்தி அனுப்பப்படும் குறுந்தகவல்களைத் (SMS) தடுக்க சிங்கப்பூர்க் காவல்துறை Apple, Google நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (நவம்பர் 30) இரு நிறுவனங்களும் தடுப்புகளை அவற்றின் குறுந்தகவல் சேவைகளில் பொருத்தவேண்டும்.
அரசாங்க அமைப்புகளிலிருந்து நேரடியாக வரும் குறுந்தகவல்கள் "gov.sg" என்ற பெயரைக் கொண்டுள்ளன. போலித் தகவல்களிலிருந்து உண்மையான தகவல்களைக் கண்டறிய அது உதவுகிறது.
ஆனால் அது Appleஇன் iMessage சேவையிலும் Googleஇன் Google Messages சேவையிலும் இன்னும் நடப்புக்கு வரவில்லை.
இதுவரை SingPost அமைப்பைப் பிரதிநிதித்தி 120க்கும் அதிகமான மோசடித் தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.
அத்தகையச் சம்பவங்களைத் தவிர்க்க, பாதுகாப்பு அம்சங்களைக் குறுந்தகவல் சேவைகளில் பொருத்தும்படி காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரவுக்கு இரு நிறுவனங்களும் இணங்கியிருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
