செய்திகள் உலகம்
மீண்டும் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
பெய்ரூட்:
கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு லெபனான் தலைநகா் பெய்ரூட் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 21 போ் காயமடைந்தனா்.
இஸ்ரேல்-காஸா போரில் ஹமாஸ் படையை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை ஆதரித்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஹிஸ்புல்லா படையை குறிவைத்து லெபனானில் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதிகளில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
மூத்த ஹிஸ்புல்லா படைத் தலைவரான அலி தப்தாயை குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதில் பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்தாா். 21 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசஃப் ஓன் கண்டனம் தெரிவித்தாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 9:33 pm
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானம் விபத்து: விமானி உயிரிழந்தார்
November 17, 2025, 10:58 pm
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
November 16, 2025, 9:11 pm
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் பெரும் விரிசல்: டெய்லர் கிரீனுடன் மோதல் முற்றுகிறது
November 16, 2025, 9:49 am
ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா
November 15, 2025, 4:12 pm
மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு
November 15, 2025, 4:01 pm
MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு
November 14, 2025, 3:31 pm
