செய்திகள் உலகம்
மீண்டும் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
பெய்ரூட்:
கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு லெபனான் தலைநகா் பெய்ரூட் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 21 போ் காயமடைந்தனா்.
இஸ்ரேல்-காஸா போரில் ஹமாஸ் படையை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை ஆதரித்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஹிஸ்புல்லா படையை குறிவைத்து லெபனானில் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதிகளில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
மூத்த ஹிஸ்புல்லா படைத் தலைவரான அலி தப்தாயை குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதில் பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்தாா். 21 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசஃப் ஓன் கண்டனம் தெரிவித்தாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
