செய்திகள் மலேசியா
கேரளாவில் அதிகரித்துள்ள மூளையை உண்ணும் அமீபா தொற்று குறித்து மலேசிய ஐயப்ப பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: யுவராஜா குருசாமி
பத்துமலை:
கேரளாவில் அதிகரித்துள்ள மூளையை உண்ணும் அமீபா தொற்று குறித்து மலேசிய ஐயப்ப பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி எச்சரித்துள்ளார்.
ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுகாதார எச்சரிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக நீரில் பதிவாகியுள்ள மூளையை உண்ணும் அமீபா தொற்றுகள் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பக்தர்களுக்கும் சங்கம் கேட்டு கொள்கிறது.
ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காக, இணைக்கப்பட்ட விதிமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
நதி குளியலைத் தவிர்ப்பது, மூக்குக் கிளிப்புகளைப் பயன்படுத்துவது, பாதுகாப்பான பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது,மாசுபட்ட நீர் மூக்கில் நுழைவதைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
இந்த புனித பயணத்தின் போது உங்கள் உடல்நலம், பாதுகாப்பு எங்களுக்கு முன்னுரிமையாகும் என்று யுவராஜா குருசாமி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
