செய்திகள் மலேசியா
தேமுவில் இருந்து வெளியேறுவதா இல்லையா; மஇகாவின் முடிவை ஏற்றுக்கொள்ள தயார்: ஜாஹித்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பான மஇகாவின் முடிவை ஏற்றுக்கொள்ள தயார்.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
தேசிய முன்னணியில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்ற மஇகாவின் முடிவை ஏற்றுக்கொள்வதற்கு நான் திறந்த மனதுடன் உள்ளேன்.
மேலும் அதன் உள் விவகாரங்களில் தலையிடுவதில் தனக்கு விருப்பமில்லை.
இருந்தபோதிலும் கூட்டணிக் கூறுகளின் முன்னேற்றங்களை, குறிப்பாக மஇகா ஆண்டு பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை, எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
அவர்களின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டதை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன்.
பிரதிநிதிகள், மஇகா தலைமை எடுக்கும் எந்த முடிவுகளையும் நான் மதிக்கிறேன்.
அவர்களின் உள் விவகாரங்களில் தலையிடும் எண்ணம் எனக்கு இல்லை.
அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது சம்பந்தப்பட்ட கட்சியைப் பொறுத்தது.
நாங்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம் என்று அவர் ஊடகங்களைச் சந்தித்தபோது கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
