செய்திகள் மலேசியா
கூலாயில் மூன்று வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் 3 பேர் மரணம்
கூலாய்:
கூலாயில் மூன்று வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.
கூலாய் மாவட்ட போலிஸ் தலைவர் டான் செங் லீ இதனை கூறினார்.
நேற்று இங்குள்ள ஜாலான் செனாய் - சீலாங்கில் இரண்டு லோரிகளும் ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளாகின.
மாலை 4.15 மணியளவில் நடந்த இந்த விபத்து, 68 வயது உள்ளூர்வாசி ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா காரை பின்னால் இருந்து லாரி மோதியதில் நிகழ்ந்ததாக நம்பப்படுவதாக முதற்கட்ட போலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட காரில் 65 முதல் 87 வயதுக்குட்பட்ட மூன்று பெண் பயணிகள் இருந்தனர், லோரியை 46 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்றார்.
மோதலின் விளைவாக, சம்பந்தப்பட்ட வாகனம் எதிர் பாதையில் சென்று, 23 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற மற்றொரு லோரியுடன் மோதியது.
23 வயது லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
அதே நேரத்தில் மற்றொரு லோரி ஓட்டுநரும் காரில் இருந்த ஒரு பயணியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தனர் என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
