செய்திகள் மலேசியா
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா மாநாட்டிற்கு பிரதமர் வாழ்த்து
ஷாஆலம்:
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா மாநாட்டிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவை இன்று ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறுகிறது.
கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இம்மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மலர் கூடையை அனுப்பி வைத்தார்.
அதே வேளையில் பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
மஇகாவின் தேசியப் பேராளர் மாநாடு முக்கிய மாநாடாக விளங்குகிறது.
மலேசிய இந்திய சமுதாயத்தின் உரிமை, சமூக நலனை பாதுகாக்கும் மாநாடாகவும் இது அமைகிறது.
மடானி கொள்கையின்படி, அனைவரையும் உள்ளடக்கிய, நியாயமான, முற்போக்கான கொள்கைகளை தொடர்ந்து வகுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
மேலும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, மாற்றங்களைச் செய்வதற்கான துணிச்சல், நாட்டை வளர்ப்பதில் ஒற்றுமை ஆகியவற்றுடன் மட்டுமே, ஒவ்வொரு குடிமகனும் சமமான வளர்ச்சியின் பலன்களை அனுபவிப்பதை உறுதி செய்ய முடியும் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
