செய்திகள் உலகம்
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
பெலம்:
பிரேசிலின் பெலம் நகரில் நடைபெற்றுவரும் COP30 பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியே பழங்குடியினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
அவர்கள் அந்தக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த தடிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என்று ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கலைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களால் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறினர்.
இவ்வாண்டின் COP30 பருவநிலை மாநாட்டுக்குப் பழங்குடியினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
வனப்பகுதிகளை எவ்வாறு கையாளமுடியும் என்பதில் கூடுதல் உரிமை வழங்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
