செய்திகள் மலேசியா
இலக்கவியல் வாயிலாக ஆலய மேலாண்மை திட்டம்; ஆலயங்களின் ஆர்ஓஎஸ், திவால் பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்கும்: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
இலக்கவியல் வாயிலாக ஆலய மேலாண்மை திட்டம் ஆலயங்களின் ஆர்ஓஎஸ், திவால் பிரச்சினைகளுக்கு முழு தீர்வை கொடுக்கும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
நாட்டில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட ஆலயங்கள் திவால் இலாகாவின் நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளன.
இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் முறையான ஆண்டு அறிக்கை, கணக்கறிக்கை இல்லாததே முக்கிய காரணம் ஆகும்.
இதன் அடிப்படையில் தான் மஹிமா ஆலய மேலாண்மை இலக்கவியல் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
இந்த முயற்சியின் கீழ் மஹிமா, டிஎஸ்கே சமூக நல அமைப்பு, GRASP Software Solution Sdn. Bhd. ஆகிய நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களும் இலக்கவியல் முறையில் இயக்குவதற்காக Temple Management System என்பதனை அறிமுகப்படுத்துகின்றோம்.
இந்த திட்டத்திற்கான ஹார்ட்வேவை மஹிமா இலவசமாக ஆலயங்களுக்கு வழங்க உள்ளது.
அதேவேளையில் ஆலயங்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்த உள்ளது.
அர்ச்சனைகள் தொடங்கி ஆலயங்களுக்கான நிதி உதவிகள் வரை அனைத்துமே இலக்கியவியல் மூலம் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் ஆலயத்தின் கணக்கு வழக்குகள் முறையாக இருக்கும்.
குறிப்பாக ஆண்டு இறுதியில் ஆலயத்தின் கணக்கறிக்கையை சங்கங்களின் பதிவிலாகாவிற்கு சமர்ப்பிக்க பெரும் உதவியாக இருக்கும் என்று இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
முதல் கட்டமாக மஹிமாவில் உறுப்பினர்களாக இருக்கும் ஆலயங்களில் இருந்து இந்த திட்டம் தொடங்க உள்ளது.
அதைத்தொடர்ந்து மற்ற ஆலயங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களும் இலக்கவியலுக்கு மாற வேண்டும் என்பதே மஹிமாவின் முதன்மை இலக்காக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 15, 2026, 1:03 pm
பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் அம்னோவிற்கு வரவேற்க ஜாஹித் தயாராக உள்ளார்: புவாட்
January 15, 2026, 11:25 am
அம்னோ மாநாட்டில் கைரி ஜமாலுத்தீன்
January 14, 2026, 7:11 pm
தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
