செய்திகள் உலகம்
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
சிங்கப்பூர்:
டன்லப் ஸ்ட்ரீட்டில் (Dunlop Street) கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (8 நவம்பர்) விடியற்காலை சுமார் 3.55 மணிக்குச் சம்பவம் குறித்துத் தகவல் பெற்றதாகக் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
சந்தேக நபர், 28 வயது ஆடவரை ஒரு சந்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக நம்பப்படுகிறது.
அந்த 28 வயது ஆடவரிடம் சந்தேக நபர் பணம் கேட்டதாகத் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பாதிக்கப்பட்டவர் சுமார் 190 வெள்ளி பணத்தைக் கொடுத்ததாகக் காவல்துறை கூறியது.
அவர் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதிகாரிகள் கண்காணிப்புக் கேமரா மூலம் சந்தேக நபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர்.
20 மணிநேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று நீதிமன்றத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும்.
காயம் விளைவித்துக் கொள்ளையடிக்கும் குற்றத்துக்குக் குறைந்தது 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் குறைந்தது 12 பிரம்படியும் அந்த ஆடவருக்கு விதிக்கப்படலாம்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
November 14, 2025, 3:31 pm
தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை
November 14, 2025, 2:03 pm
இந்திய நிறுவனத்துக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
சீனாவில் பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இடிந்து விழுந்தது
November 12, 2025, 12:22 pm
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
November 12, 2025, 10:19 am
20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 9, 2025, 3:26 pm
