நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும் சபாவைத் திருப்பித் தர தேசிய முன்னணி விரும்புகிறது: ஜாஹித்

கோத்தா கினபாலு:

மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும் சபாவைத் திருப்பித் தர தேசிய முன்னணி விரும்புகிறது.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

17ஆவது பொதுத் தேர்தலை, பிகின் பாலிக் சபா என்ற முழக்கத்துடன் தேசிய முன்னணி எதிர்கொள்கிறது.

இது கட்சி இயந்திரம், வாக்காளர்கள் மாநிலத்தின் மாற்றம், வளர்ச்சிக்கான வெற்றியை உறுதி செய்வதற்கான உந்துதலாக தேசிய முன்னணி பயன்படுத்தியது.

இந்த முழக்கத்தின் மூலம், மாநிலத்தின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.

இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் சுதந்திரமாக இருக்கவும் முடியும் என்று கோரினார்.

சபா மாநிலம் எப்போதும் சபா மக்களுக்கானது. மேலும் எங்கள் சபாவை மீட்போம் என்ற முழக்கத்தை செயல்படுத்த விரும்புகிறோம்.

இந்த முறை தேர்தலில் நாங்கள் ஒரு கேம் சேஞ்சர் ஆவோம்.

சபா மக்களுக்காக கடுமையான மாற்றங்களைச் செய்வோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset