நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீடுகளை காலி செய்ய கம்போங் ஜாவா மக்களுக்கு மந்திரி புசாரிடம் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது: குணராஜ்

கோத்தா கினபாலு:

கம்போங் ஜாவா லோட் 11113 மக்கள் வீடுகளை காலி செய்ய கூடுதல அவகாசம் வழங்க மாநில மந்திரி புசாரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

லோட் 11113 கம்போங் ஜாவாவில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி 7 நாட்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்மார்ட்சேவா வீடுகளுக்கு செல்ல சில குடியிருப்பாளர்கள் மாநில அரசால் உதவி பெற்றுள்ளனர்.

இதனால் அவர்களுக்கான காலக்கெடு இந்த மாத இறுதி வரை கால நீட்டிக்க வேண்டும்.

காரணம் அவர்களில் பலர் மூத்த குடிமக்கள் ஆவர்.

இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியிடம் கோரிக்கையை முன்வைத்தேன்.

குடியிருப்பாளர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்ற வேண்டியிருப்பதால், கால நீட்டிப்பை அங்கீகரிக்க அவர் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

சிலாங்கூர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரிக்கு எனது மிகுந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவை எடுப்பார் என நான் நம்புகிறேன் என குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset