செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி (Kalmaegi) சூறாவளி வியட்நாமையும் தாக்கியது: 6 விமான நிலையங்கள் மூடப்பட்டன
ஹனோய்:
பிலிப்பைன்ஸில் வீசிய கால்மேகி (Kalmaegi) சூறாவளி வியட்நாம் கரையை அடைந்திருக்கிறது.
நேற்று வியட்நாமின் மத்திய பகுதியில் மணிக்குச் சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியதால் கட்டடங்களின் சன்னல்களும் கூரைகளும் உடைந்தன.
கரையோரம் வசிக்கும் 7,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் பள்ளிக்கூடங்களும் குறைந்தது 6 விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

10 மீட்டர் உயரத்துக்கு அலை எழுந்தது.
மத்திய வியட்நாம் முழுவதும் ஆறுகளில் நீர்மட்டம் ஆபத்தான நிலையை எட்டியிருக்கிறது.
சூறாவளி ஓயும்வரை வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
தேடல் மீட்புப் பணிகளில் 260,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு வியட்நாம் எதிர்நோக்கும் 13-ஆவது புயல் இது.
இந்த ஆண்டில் மட்டும் இயற்கைப் பேரிடர்களால் வியட்நாமில் மாண்டவர்கள் அல்லது காணமல்போனவர்களின் எண்ணிக்கை 279.
நாட்டில் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்புச் சுமார் 2 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஹோசிமின் சிட்டி அக்பர்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 8:55 pm
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
