செய்திகள் உலகம்
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
மணிலா:
Kalmaegi சூறாவளி காரணமாக
பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்மேகி (Kalmaegi) சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 140ஆகப் பதிவாகியுள்ள நிலையில் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior) அவ்வாறு அறிவித்தார்.
நாட்டின் மத்திய பகுதிகளில் 127 பேரை இன்னும் காணவில்லை.
சிபூ (Cebu) மாநிலம் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு 70க்கும் அதிகமானோர் மாண்டனர்.
69 பேர் காயமுற்றனர். 65 பேரைக் காணவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.
மாண்டோர் பெரும்பாலோர் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகள் தற்போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபரின் அவசரநிலை பிரகடனம் மீட்பு, நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதற்கு உதவும்.
கால்மேகி பிலிப்பீன்ஸில் இந்த ஆண்டு வீசும் 20ஆவது சூறாவளி. அதுவே இவ்வாண்டின் ஆக மோசமான பேரிடர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
