செய்திகள் உலகம்
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
சிங்கப்பூர்:
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கச் சிங்கப்பூர் சில புதிய பயிற்சிகளை வழங்கவிருக்கிறது.
அமைதியை நிலைநாட்டவும் வட்டாரத்தைச் சீரமைக்கவும் அவை உதவும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சொன்னார்.
மின்னிலக்கப் பொருளாதாரம்; மின்னிலக்கத் தொழில்முனைப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்.
2026ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் அந்தப் பயிற்சிகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவித்தொகுப்பின்கீழ் (Enhanced Technical Assistance Package) இடம்பெறும்.
கடந்த திங்கட்கிழமை (3 நவம்பர்) டாக்டர் பாலகிருஷ்ணன் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன வட்டாரங்களுக்கும் 4 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
அவர் பாலஸ்தீன வட்டாரத்தின் நிர்வாகத் தலைநகர் ரமல்லாவிற்குச் (Ramallah) சென்றார்.
அங்கு அவர் உலக உணவுத் திட்டத்திற்கு (The World Food Programme) 500,000 டாலர் (சுமார் 653,000 வெள்ளி) காசோலையை வழங்கினார்.
அந்தத் தொகை காஸாவில் மேற்கொள்ளப்படும் அவசர நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.
பசியைப் போக்கவும் மக்களிடையே நம்பிக்கையை விதைக்கவும் சிங்கப்பூர் துணைநிற்கும் என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
