செய்திகள் உலகம்
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
சிங்கப்பூர்:
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கச் சிங்கப்பூர் சில புதிய பயிற்சிகளை வழங்கவிருக்கிறது.
அமைதியை நிலைநாட்டவும் வட்டாரத்தைச் சீரமைக்கவும் அவை உதவும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சொன்னார்.
மின்னிலக்கப் பொருளாதாரம்; மின்னிலக்கத் தொழில்முனைப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்.
2026ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் அந்தப் பயிற்சிகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவித்தொகுப்பின்கீழ் (Enhanced Technical Assistance Package) இடம்பெறும்.
கடந்த திங்கட்கிழமை (3 நவம்பர்) டாக்டர் பாலகிருஷ்ணன் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன வட்டாரங்களுக்கும் 4 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
அவர் பாலஸ்தீன வட்டாரத்தின் நிர்வாகத் தலைநகர் ரமல்லாவிற்குச் (Ramallah) சென்றார்.
அங்கு அவர் உலக உணவுத் திட்டத்திற்கு (The World Food Programme) 500,000 டாலர் (சுமார் 653,000 வெள்ளி) காசோலையை வழங்கினார்.
அந்தத் தொகை காஸாவில் மேற்கொள்ளப்படும் அவசர நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.
பசியைப் போக்கவும் மக்களிடையே நம்பிக்கையை விதைக்கவும் சிங்கப்பூர் துணைநிற்கும் என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
