செய்திகள் உலகம்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு சவுதி அரேபியாவில் நுழைய அனுமதி
ரியாத்:
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியைப் போட்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. இது முஸ்லிம்கள் உம்ரா யாத்திரைகளில் பங்கேற்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி 1 முதல் ரஷ்ய ஸ்புட்னிக் V தடுப்பூசி மூலம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சவூதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது,” என்று ஸ்புட்னிக் V இன் வளர்ச்சிக்கு நிதியளித்த ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு, "ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்ட உலகம் முழுவதிலுமிருந்து வரும் முஸ்லிம்கள் மக்கா, மதீனா நகரங்களில் உள்ள புனிதத் தலங்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளில் பங்கேற்க உதவும்" என்று அந்த நிதியம் கூறியுள்ளது.
ஆனால், ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுள்ள வெளிநாட்டு பயணிகள் 48 மணிநேரம் தனிமைப்படுத்தப்பட்டு PCR சோதனை எடுக்க வேண்டும் என்றும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசியை ஏற்றுக்கொண்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சவுதி அரேபியா இணைந்துள்ளது.
அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் ஸ்புட்னிக் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
