நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவைப்பட்டால் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நாம் முறித்துக் கொள்ளலாம்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

தேவைப்பட்டால் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நாம் முறித்துக் கொள்ளலாம்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியா சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்ற கூற்றுகளை நான் நிராகரிக்கிறேன்.

தேவைப்பட்டால் அந்த ஒப்பந்தத்தை அந்த நாடும் நாமும் முறித்துக் கொள்ளலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்ட ஒப்பந்தம், நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மூத்த அரசாங்க அதிகாரிகளால் கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அவர் மக்களவையில் தெரிவித்தார்.

மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது பைசல் வான் அகமது கமால், ஏற்றுக்கொள்ள முடியாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இது காலனித்துவத்தின் ஒரு வடிவம் என்று வர்ணிக்கப்பட்டது.

ஆனால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு வெளியேறும் பிரிவு உள்ளது.

அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களிலும் ஒரு வெளியேறும் பிரிவு உள்ளது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset