செய்திகள் மலேசியா
1,000 ஆலயங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய மடானி அரசாங்கத்திற்கு பாராட்டு: குணராஜ்
செந்தோசா:
நாட்டில் கிட்டத்தட்ட 1,000 ஆலயங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்து சமய வழிபாட்டு தலங்கள் யாவும் சமுதாய மையங்களாக உருமாற வேண்டும் எனும் இலக்கிற்கு இசைவாகவும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மடானி அரசாங்கம் தேசிய அளவில் ஆயிரம் ஆலயங்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் வீதம் 20 மில்லியன் ரிங்கிட் நிதியாக அளிக்க முன்வந்ததற்கு செந்தோசா வாக்காளர்களின் சார்பில் பாராட்டும் மலேசிய இந்து சமுதாயத்தின் சார்பில் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின்கீழ் நாடு கட்டம் கட்டமாக பொருளாதார முன்னேற்றம் கண்டுவரும் வேளையில் இந்து சமய மறுமலர்ச்சிக்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இது ஆலயங்களுக்கான நிதி உதவியாக மட்டுமல்லாமல், இந்த நிதி மூலம் சமூக நலன், கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தலாம்
அதற்கு ஏற்ப சக நண்பர்கள், சமூகத் தலைவர்கள், சமய அமைப்புகளின் தலைவர்கள் ஆலயத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துதா தரப்பினரும் தங்களுக்கு இடையேயான வேறுபாட்டை மறந்து நம் சமுதாயம்-நம் சமயம் என்ற ஒற்றை சிந்தனையில் நிலைகொண்டு இதற்கு துணை நிற்க வேண்டும்.
இத்தகைய அரிய பொன்னான வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்துமாறும் இந்த நிதியை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தி சமூக ஒற்றுமையையும் நலனையும் மேம்படுத்தலாம் என்றும் தக்கார் சிந்திக்க வேண்டுமே அன்றி, வள்ளுவ பெருமான் எச்சரித்துள்ளபடி தகவிலாரைப் போல நடந்து கொள்ள முற்பட்டால், அது நம் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
20 ஆயிரம் ரிங்கிட்டை பெறுகின்ற ஒவ்வோர் ஆலயமும், அந்த நிதியில் இருந்து பத்தில் ஒரு பங்கான 2000 வெள்ளியை சமய சமூக நலம் கருதி கொடைவழங்க முன்வந்தால், 1000 ஆலயங்களும் இணைந்து 2 மில்லியன் ரிங்கிட்டை திரட்ட முடியும்.
இந்த தொகை பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் மக்களுக்கு பயனளிக்கும்.
இந்த முயற்சி 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த தொடக்கமாக அமையும்.
உண்மையில் மித்ரா நிதியிலிருந்து ஆண்டுதோறும் பத்து விழுக்காட்டு நிதியை, மித்ரா, செடிக் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தனியே ஒதுக்கி சேமித்து வைத்திருந்தால், இந்த பத்தாண்டுகளில் அது 100 கோடியாக உயர்ந்திருக்கும்.
அதைக் கொண்டு மிகப் பெரிய நிதிக் கட்டமைப்போடு இந்திய சமுதாயத்திற்கான நிரந்தர நிதியமாக ன உருவாக்கி இருக்கலாம்.
இதைப் பற்றியெல்லாம் எவரும் சிந்திக்கவில்லை; போனது போனதாக இருக்கட்டும்.
இந்த ஆலய நிதியிலிருந்தாவது ஒரு பொது நிதியை சமுதாயத்தின் எதிர்காலம் கருதி சேமிப்பதில் அக்கறை கொள்வோம்.
மலேசிய இந்திய சமுதாய பாதுகாப்பு எதிர்கால நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் சமூகத்திற்கு நல்லது
தவிர, இது நம் சமூகத்தில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் வலுப்பெற வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புவதாக கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினருமான குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 4:12 pm
சூடானில் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர்
November 3, 2025, 2:36 pm
அக்டோபர் 31 வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்
November 3, 2025, 2:34 pm
மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இருக்காது: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 3, 2025, 1:11 pm
இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பூடி 95 வழிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: துணையமைச்சர்
November 3, 2025, 1:10 pm
பிளேக் பெந்தர் கிண்ண கால்பந்து போட்டி: 16 குழுக்கள் பங்கேற்பு
November 3, 2025, 1:06 pm
சிலம்பக் கலைக்கு முக்கிய பங்காற்றிய டத்தோ மகாகுரு சிவாவுக்கு தங்க நிற பட்டையம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
November 3, 2025, 1:04 pm
