செய்திகள் மலேசியா
இரண்டு உறுப்பினர்களுக்கு தொற்று: கிளந்தான் சட்டமன்றம் ஒத்தி வைப்பு
கோத்தபாரு;
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கிளந்தான் சட்டமன்றம் இரு தினங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொற்றுப்பரவலைத் தடுக்கும் வகையில் சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்துல்லாஹ் யாகூப் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 7ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற இருந்ததாகவும், எனினும் நடப்பு நிலைமையை கவனத்தில் கொண்டு கூட்டத்தொடர் முன்பே முடித்துக்கொள்ள பட்டதாகவும் சட்டமன்ற சபாநாயகர் அப்துல்லாஹ் யாகூப் (Abdullah Yakub) கூறினார்.
தஞ்சோங் மாஸ் Tanjong Mas, தென்டோங் Tendong சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மொஹம்மத் ரோஸ்லி இஸ்மாயிலும் தம்மை தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படும் முன்பே, கிளந்தான் மாநில 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விவாதம் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 5:10 pm
மாற்றுத்திறனாளி பெண் ஊழியரைத் தாக்கிய சமூக ஊடகப் பிரபலத்துக்கு RM2000 ரிங்கிட் அபராதம்
March 17, 2026, 5:08 pm
கோத்தா பாரு - கோம்பாக் இடையிலான இரயில் பாதை பணிகள் முன்கூட்டியே நிறைவு
March 17, 2026, 5:07 pm
டீசல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி: சபா, சரவாக்கில் மானிய முறையை மாற்றியமைக்க மலேசிய அரசு தீவிரம்
March 17, 2026, 5:05 pm
“மலேசிய உள்நாட்டுச் சுற்றுலாவில் அதிரடி வளர்ச்சி”: புள்ளிவிவரத் துறை அதிகாரி உசிர் மஹிதின்
March 17, 2026, 5:02 pm
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல்
March 17, 2026, 3:56 pm
நோன்பு பெருநாளுக்கு 50 சதவீதம் டோல் கட்டணம் தள்ளுபடி
March 17, 2026, 3:55 pm
