செய்திகள் உலகம்
தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்: ஹாங்காங் அறிவிப்பு
ஹாங்காங்:
தொற்று அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரையும் சேர்த்துள்ளது ஹாங்காங்.
சிங்கப்பூரில் இரண்டு ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ஹாங்காங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளுக்கு ஹாங்காங் விதிமுறைகளைக் கடுமையாக்கி வருகிறது.
ஐஸ்லாந்து நாட்டிலும் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவானதையடுத்து, சிங்கப்பூருடன் அந்நாட்டையும் தொற்று அபாயமுள்ள நாடாக ஹாங்காங் அறிவித்தது.
கடந்த மூன்று வாரங்களில் இவ்விரு நாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்களுக்கு ஹாங்காங்கில் நுழைய அனுமதி இல்லை.
வெளிநாடுகளில் உள்ள ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் அங்கு செல்ல விரும்பும் பட்சத்தில் தங்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
ஹாங்காங் சென்றடைந்த பின்னர் அவர்கள் மூன்று வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 10:43 am
ஏவுகணை தாக்குதலின் விளைவு: பென் குரியொன் விமான நிலையத்தில் சேதம்
March 18, 2026, 12:09 pm
மேற்கு ஆசிய பதற்றம்: தேசிய தினக் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாகிஸ்தான்
March 18, 2026, 11:55 am
“முட்டாள்தனமான செயல்”: ‘NATO’வுக்கு எதிராக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆவேசம்
March 18, 2026, 10:51 am
ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உயரதிகாரி பதவி விலகல்
March 18, 2026, 10:49 am
வான்தாக்குதலில் ஈரானின் உயரதிகாரி அலி லாரிஜானி பலி: பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு
March 18, 2026, 9:54 am
மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
March 17, 2026, 2:53 pm
எரிபொருள் பற்றாக்குறை - இலங்கையில் 4 நாள் மட்டுமே வேலை
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 11:41 am
