செய்திகள் உலகம்
ஏவுகணை தாக்குதலின் விளைவு: பென் குரியொன் விமான நிலையத்தில் சேதம்
ஜெருசலேம்:
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் துண்டுகள், டெல் அவீவ் அருகிலுள்ள பென் குரியொன் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் ஊடகங்களின் தகவலின்படி, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில தனியார் விமானங்கள் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பான தணிக்கை உத்தரவு இராணுவத்தால் நீக்கப்பட்டாலும், நிகழ்ந்த திகதி வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த தாக்குதலால் ஒரு சிறிய தனியார் விமானம் தீக்கிரையாகி சேதமடைந்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதிலிருந்து, அந்த விமான நிலையம் தாக்கம் அடைந்ததை இஸ்ரேல் இராணுவம் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, மார்ச் 5-ஆம் தேதி அந்த விமான நிலையத்தையும் அருகிலுள்ள விமானப்படை தளத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போதைய சூழ்நிலை காரணமாக மார்ச் 22 முதல் 28 வரை பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
ஈரானில் உளவுத்துறை அமைச்சரை கொலை செய்த இஸ்ரேல்: "யாரையும் விடமாட்டோம்" என நெதன்யாகு அறிவிப்பு
March 19, 2026, 11:09 am
ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறதா?: ராணுவத்தின் செல்வாக்கை எதிர்த்தவருக்கு நேர்ந்த கொடூரம்
March 19, 2026, 10:12 am
20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாட்டம்: சவூதி, அமீரகம், கத்தார் அறிவிப்பு
March 18, 2026, 12:09 pm
மேற்கு ஆசிய பதற்றம்: தேசிய தினக் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாகிஸ்தான்
March 18, 2026, 11:55 am
“முட்டாள்தனமான செயல்”: ‘NATO’வுக்கு எதிராக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆவேசம்
March 18, 2026, 10:51 am
ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உயரதிகாரி பதவி விலகல்
March 18, 2026, 10:49 am
