நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஏவுகணை தாக்குதலின் விளைவு: பென் குரியொன் விமான நிலையத்தில் சேதம்

ஜெருசலேம்: 

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் துண்டுகள், டெல் அவீவ் அருகிலுள்ள பென் குரியொன் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் ஊடகங்களின் தகவலின்படி, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில தனியார் விமானங்கள் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பான தணிக்கை உத்தரவு இராணுவத்தால் நீக்கப்பட்டாலும், நிகழ்ந்த திகதி வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த தாக்குதலால் ஒரு சிறிய தனியார் விமானம் தீக்கிரையாகி சேதமடைந்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதிலிருந்து, அந்த விமான நிலையம் தாக்கம் அடைந்ததை இஸ்ரேல் இராணுவம் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, மார்ச் 5-ஆம் தேதி அந்த விமான நிலையத்தையும் அருகிலுள்ள விமானப்படை தளத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போதைய சூழ்நிலை காரணமாக மார்ச் 22 முதல் 28 வரை பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset